திருப்பூர்: கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்த பேக்கரி மற்றும் குளிர்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தாராபுரத்தில் உள்ள பூக்கடைக்காரர் தெரு, பெரிய கடை வீதி பகுதிகளில் செயல்பட்டு வரும் பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன ரொட்டி, பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Night
Day