திருப்பூர்: சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அள்ளிய தூய்மை பணியாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால்  தூய்மை பணியாளர் அள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது. இடுவாய் ஊராட்சியில் கிட்டுசாமி என்கிற தூய்மை பணியாளர் வெறும் கையால் கால்வாய்களை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இடுவாய் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day