திருப்பூர்: தள்ளுவண்டியை எடுத்து சென்ற நிதி நிறுவனம் - வியாபாரி தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் பகுதியில் தனது தள்ளுவண்டியை எடுத்து சென்ற நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகனுடன் நிலக்கடலை வியாபாரி ஆட்சியரகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.  தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வரும் கருப்பசாமி என்பவர், தனியார் நிறுவனத்திடம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வியாபாரம் சரிவர இல்லாததால் கடந்த 3 மாதங்களாக வட்டி கட்டாமல் கருப்பசாமி இருந்துள்ளார். இதனையடுத்து தள்ளுவண்டியை தனியார்  நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட கருப்பசாமி தள்ளுவண்டியை மீட்டுதரக்கோரி ஆட்சியரகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

Night
Day