திருப்பூர்: மகளிர் தினத்தையொட்டி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருப்பூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பிங்கத்தான் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பிங்க் டீசர்ட் அணிந்து பங்கேற்றனர். ஒவ்வொருவரும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி பற்றி விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். மங்கலம் சாலை வழியாக சென்ற பேரணி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நிறைவடைந்தது. 

Night
Day