திருப்பூர்: மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி அருகே மின்மாற்றி வெடித்து, கொழுந்துவிட்டு எரியும் வீடியோ வைரலாகி வருகிறது. சிக்கண்ணா அரசு கலை கல்லூரி பின்புறம் உள்ள தணிகை நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்மாற்றி நேற்றிரவு வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் மின் ஒயர்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மின்மாற்றி அடியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடனடியாக எடுத்து செல்லப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்திருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day