திருப்பூர்: ரயில்வே தரைப்பாலம் அடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே ரயில்வே தரைபாலம் அடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி, பொதுமக்கள் கழிவுநீரில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வஞ்சிபாளையம் ரயில்வே தரைப்பாலத்தில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தேங்கி நிற்கும் கழிவு நீரில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day