திருப்பூர்: விசைத்தறி உரிமையாளரின் வீட்டு கேட்டை லாரி மூலம் இடித்து கொல்ல முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொடுத்த கடனை கேட்டதற்காக விசைத்தறி உரிமையாளரின் குடும்பத்தை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஆலுத்துபாளையத்தை சேர்ந்த மணிராஜ் என்பவர் விசைத்தறி வைத்திருக்கிறார். இவர் சந்திரசேகர் என்பவருடைய மில்லில் நூல் வாங்கி துணிகளாக நெய்து கொடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கூலி பணத்தை கொடுக்காமல், 42 லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிராஜ் பாக்கி பணத்தை கொடுத்த பின் வேலையை தொடர்வதாகவும், அடிக்கடி பாக்கி பணத்தையும் கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் நேற்றிரவு 50-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று மணிராஜ் வீட்டின் கேட்டை லாரி ஏற்றி இடித்து, அவரது குடும்பத்தினரை கொல்ல முயன்றுள்ளார். 

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த மணிராஜின் மனைவி சந்திரகலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், சந்திரசேகர் மற்றும் அவரது அடியாட்களை தேடி வருகின்றனர். 

Night
Day