திருப்பூர்: 'படையப்பா' யானை பேருந்தை தாக்கியதால் அலறிய பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் படையப்பா யானை அரசுப்பேருந்தை வழிமறித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூணாறில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப்பேருந்து ஒன்று, உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. தலையார் பகுதியில் சென்றபோது பேருந்தை வழிமறித்த படையப்பா என்ற காட்டுயானை, பேருந்தின் கண்ணாடியை தும்பிக்கையால் சேதப்படுத்தியது. இதனால் பயணிகள் அலறி சத்தமிட்டனர். இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நடுவழியில் சிக்கி கடும் அவதிகுள்ளாகினர். எனவே, மதம்பிடித்த படையப்பா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day