திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து உபரி நீரை திறக்கக்கோரி அணையில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., திட்டத்தில் உபரி நீரைத் திறந்து விட வலியுறுத்தி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது சட்டப்படி உத்தரவு பிறப்பித்து தண்ணீரை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரை தண்ணீர் திறந்து விடாடதால் ஆத்திரமடைந்த விவசாயிகள்,  உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

varient
Night
Day