திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். விடுமுறை நாளான இன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day