தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கு வேளாண் இயக்குனராக பதவி அளிக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த பா.முருகேஷ் அப்போது நடைபெற்ற 32 விவசாய குறைதீர்வு கூட்டங்களில் ஒன்றில்கூட முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காத அவருக்கு வேளாண்துறை இயக்குனராக பதவி அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி பட்டை நாமம் போட்டும், சோப்பு நுரையில் முட்டையிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...