திருவண்ணாமலை: இருசக்கர வாகனம் மீது சக்தி பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய சக்தி பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஓட்டுநரை, மாணவர்களின் பெற்றோர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியிலிருந்து புலியூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மாணவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சக்தி பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து, அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.  இதனையறிந்த மாணவனின் உறவினர்கள், பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை அரசு மருத்துவமனை அருகே மடக்கி பிடித்து, ஓட்டுனரை சராமாரியாக தாக்கினர். அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day