திருவண்ணாமலை: ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதியினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளனர். சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான உண்ணாமுலை மற்றும் ராணுவத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அவரது கணவர் செல்வம் ஆகியோர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ஏலச்சீட்டு, தீபாவளிச்சீட்டு, மற்றும் ஆன்லைன் முதலீடு என பல வகைகளில் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து தலைமறைவாகி விட்டதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனவே, தம்பதியினரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day