திருவண்ணாமலை: கள்ளச்சாராய விற்பனை குறித்து ட்ரோன் மூலம் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தி முட்புதரில் மறைத்து வைக்‍கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கரம்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து போலீசார் ட்ரோன் கேமரா மூலம் மலைப் பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது முட்புதரில் மறைத்து வைக்கபட்டிருந்த 100 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Night
Day