திருவண்ணாமலை: காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து - இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வந்தவாசியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலவேடு கூட்டுச்சாலை அருகே எதிரே வந்த கார் மோதியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவருடைய இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. காரில் சென்ற பைசல் என்பவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சென்ற கீழ்கொடுங்காலூர் போலீசார் பைசலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day