திருவண்ணாமலை: குப்பைகளை குடியிருப்புகளின் அருகே கொளுத்துவதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குடியிருப்புகளின் அருகே குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை கண்டித்து நகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி நகராட்சி 4-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் புகைமூட்டம் காரணமாக குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பலமுறை வார்டு கவுன்சிலரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day