திருவண்ணாமலை: துர்க்கைநம்மியந்தல் கிராமம் மாநகராட்சியில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கைநம்மியந்தல் கிராமத்தை மாநகராட்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாநகராசியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட துர்க்கைநம்பியந்தல் கிராமமும் அந்த மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. இதனால் குழாய் வரி, சொத்து வரி உள்ளிட்டவை பல மடங்கு உயரும் என்பதோடு, 100 நாள் வேலையும் கிடைக்காது என்பதால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சென்ற போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினர். 

Night
Day