திருவண்ணாமலை: தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது தேனீக்கள் கொட்டியதில், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான விவசாயி லோகநாதன் தனது நிலத்தில் இருந்தபோது, தேனீக்கள் கொட்டியது. இதில் காயமடைந்த லோகநாதன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் லோகநாதன் உயிரிழந்தார். லோகநாதனின் மனைவி கோட்டீஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Night
Day