திருவண்ணாமலை: நிதி நிறுவனங்களின் அராஜக போக்கை கண்டித்து விவசாயி நூதன போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் நிதி நிறுவனங்களின் அராஜக போக்கை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். செங்கம் பகுதியில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கி, அதனை அராஜக போக்கில் நிதிநிறுவன ஊழியர்கள் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்‍கை எடுக்கக்கோரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமஜெயம் என்பவர், வருவாய்த்துறையினரிடம் புகார் மனு அளித்தார். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காததால், ஆத்திரமடைந்த விவசாயி, தலையில் கருப்பு துணி போட்டுக் கொண்டு உடல் முழுவதும் சங்கிலியால் பூட்டிக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். 

Night
Day