திருவண்ணாமலை: நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள பழங்குடியினப்பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றதற்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பி.எல் படிப்பினை முடித்த ஸ்ரீபதி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் 6 மாத பயிற்சி செல்ல உள்ளார். இந்நிலையில், ஸ்ரீபதி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பத்தாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரான அவரது கணவர் வெங்கட்ராமன் ஸ்ரீபதியின் படிப்பிற்கு மிகவும் உதவியதாகவும், தனது விடாமுயற்சியால் ஸ்ரீபதி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினர்.

Night
Day