திருவண்ணாமலை: பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற காளை விடும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி காளைவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட காளைகள் இலக்கு தூரத்தை நோக்கி சீரி பாய்ந்தது. இந்த விழாவில் கீழ்பாலூர், சிறுவள்ளுர், மூலக்காடு, காஞ்சி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு  போட்டியை கண்டு ரசித்தனர். காளை மாடுகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் அவசர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Night
Day