திருவண்ணாமலை: ரூ.3,000 லஞ்சம் பெற்று வசமாக சிக்கிய சமூகநலத்துறை அலுவலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சமூகநல விரிவாக்க அலுவலரை, லஞ்சு ஒழிப்புதுறையினர் கைது செய்தனர். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்காக, கரிமலைப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவர் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இவரிடம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜீவா, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையில்  ஜெயா புகாரளித்த நிலையில், ஜீவாவை கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

Night
Day