திருவண்ணாமலை: வாங்காத ரேஷன் பொருட்களுக்கு குறுஞ்செய்தி வந்ததால் மக்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களுக்கு பொருட்களை வாங்கிக் கொண்டதாக குறுஞ்செய்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள முழுநேர ரேஷன் கடையில் கணேசன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ரேஷன் கடை முறையாக திறக்கப்படுவதில்லை என்றும், ஒருநாள் மட்டுமே திறக்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிலருக்கு பெறாத ரேஷன் பொருட்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதில், மாவட்ட நிர்வாகம் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day