திருவண்ணாமலை: வீடுகளில் கருப்புகொடி கட்டி 4வது நாளாக கிராம மக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, வாக்குச்சவாடி அமைத்துக் தரக்கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி கடந்த 4 நாட்களாக தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 வாக்காளர்களை கொண்ட கொள்ளைமேடு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காததால், அங்குள்ள மக்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே தங்கள் பகுதியில் வாக்குச்சாவடி அமைத்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி கடந்த 4 நாட்களாக வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day