திருவள்ளூர்: கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள் - பொதுமக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே கடந்த ஓர் ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஓர் ஆண்டிற்கு முன் சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day