திருவள்ளூர்: கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய இளைஞர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்களை உதவி ஆய்வாளர் மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்‍கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கேள்வி எழுப்பியபோது, ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை, கேள்வி கேட்க நீ யார்? என ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், உதவி ஆய்வாளர் பிரபாகரனும் இளைஞர்களுடன் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day