திருவள்ளூர்: குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே அங்கன்வாடி பள்ளி, குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வரதராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி, குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், சாலைகளின் ஆங்காங்கே கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தூர்வாரப்படாத கால்வாய்களை விரைந்து சீர்ப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day