திருவள்ளூர்: சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்ணப்பாளையம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வீரராகவபுரம் அருகே சாலை ஓரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, மருத்துவ தேவைக்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். அந்நேரம், சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

Night
Day