திருவள்ளூர்: தண்டவாளத்தில் கனரக லாரி சிக்கியதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி சிக்கிக் கொண்டதால் ரயில்கள் அனைத்தும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. பெருமாள் பட்டு பகுதிக்கு செல்லும் வழித்தடத்தில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டில் காலை 9:30 மணி அளவில் கடக்க முயன்ற கனரக லாரி ஒன்று தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதால் ஊழியர்கள் திணறினர். இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்திலும் புறநகர் மற்றும் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. லாரியை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்திய பின்பு ரயில்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதத்துடன் இயக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

Night
Day