திருவள்ளூர்: பரோட்டோ சாப்பிட்டு மயக்கம் அடைந்த நபர் உயரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பரோட்டா சாப்பிட்டு மயக்கம் அடைந்த நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலவேடு கிராமத்தை சேர்ந்த வேலு என்பவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வாந்தி எடுத்து,  வீட்டிலேயே மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

Night
Day