திருவள்ளூர்: போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் குருவாயலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். குருவாயல் கிராமத்தில் தனிநபர் ஒருவர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி, 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷம் எழுப்பினர். தகவலறிந்து சென்ற போலீசார் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

Night
Day