திருவள்ளூர்: மாநகராட்சி மெத்தனம் - துப்புரவு பணியில் இறங்கிய காவலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பகுதியில், ஆவடி காவலர் குடியிருப்பு அருகே காவலர்களை வைத்து சாலையை சுத்தம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு அருகில் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என காவலர் குடியிருப்பு சங்கத்தினர் மாநகராட்சியில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களே, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையை சுத்தம் செய்தனர். காவலர் குடியிருப்பு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வரி செலுத்துவதாக கூறினர்.

Night
Day