திருவள்ளூர்: லே-அவுட் போட்டதாக தரிசு நிலத்துக்கு சான்றளித்த CMDA

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அருகே லே-அவுட் போடாத நிலையில், CMDA அனுமதி வழங்கி உள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிறுங்காவூர் கிராமத்தில் சுமார் 7 ஏக்கரில், 143 மனைகள் அமைக்கப்பட்டதாக டிசம்பர் 19ஆம் தேதி புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். பிப்ரவரி 24-ஆம் தேதி CMDA எனும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தரிசாக கிடக்கும் நிலத்துக்கு, அங்கீகாரம் அளித்துள்ளது. அதில், சாலை, மின்விளக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பணம் கொடுத்தால், வழிகாட்டு முறைகளை புறம்தள்ளி, திமுக ஆட்சியில் எதுவும் நடக்கும் என மக்களும், நேர்மையான அதிகாரிகளும் புலம்பி வருகின்றனர்.

Night
Day