திருவாரூர்: திமுக அரசை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவிரியில் நமக்கு உள்ள உரிமை பறிபோகும் நிலையினை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருவதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்‍கைக்‍கு துணைபோகும் திமுக அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன், மேதாது விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Night
Day