திருவாரூர்: நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகள் இடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் அருகே நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டை ஜமாலியா பகுதியில் உள்ள அரசர் குளம் நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை, அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை வீடுகள், கடைகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை அகற்றியதால் வீடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day