திருவாரூர்: வீட்டுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி வீட்டுக்கு ஒருவர் தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 47 ரெகுநாதபுரம் ஊராட்சியில் அரித்துவாரமங்கலம் என்ற பகுதியை இணைக்கும் பிரதான சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். அதனால் இந்த சாலையை விளம்பர திமுக அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வீட்டுக்கு ஒருவர் தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

varient
Night
Day