திரைப்படத் தயாரிப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் தனக்‍கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 13 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து தயாரிப்பாளர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஈஸ்வரன் என்பவர் ராஜேஸ்வரிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததுடன் தரக்‍குறைவாக பேசியதாக கூறி அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

Night
Day