துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை சோதனை : ரூ.1.42 லட்சம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த மெர்சி கீர்த்தனா என்பவரின் காரை நிறுத்தி ஆய்வு செய்தனர். அவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Night
Day