தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பிற்கு பின்பு உப்பு உற்பத்தி தொடங்கியதை அடுத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளான சத்யா நகர் மற்றும் பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பள பாத்திகள் தயார் செய்யப்பட்டு உப்பு உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day