தூத்துக்குடி : அரசு விழாவில் வாழைத்தார்களை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில், கட்டி இருந்த வாழை மரங்களிலிருந்து வாழைத்தார்கள் மற்றும் தோரணங்களில் இருந்த பழங்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். தூத்துக்குடி புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் அருகே இன்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் பங்கேற்று சென்ற பின்பு அங்கு நுழைவாயில் முன்பு கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்கள் மற்றும் தோரணங்களில் இருந்த இளநீர் மற்றும் பழங்களை பொதுமக்கள் மற்றும் உடன்பிறப்புகள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். விழாவிற்கு வந்தவர்களுக்‍கு வழங்கப்பட்ட பிரியாணிக்‍காக  பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

Night
Day