தூத்துக்குடி : மர்மநபர்கள் தீவைத்ததில் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நாட்டுப் படகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகிற்கு மர்மநபர்கள் தீவைத்ததைக் கண்டித்து, நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகு மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவரது படகை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றனர். இதில் நாட்டு படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மீனவர் முனீஸ்வரனுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், சங்குகுழி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day