தூத்துக்குடி: அசைவ பிரியர்களால் களைகட்டிய மீன்பிடி துறைமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்துக்கு அதிகாலை முதலே அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று அதிகாலை கரை திரும்பினர். இன்று வார விடுமுறை என்பதால், ஏராளாமன அசைவ பிரியர்கள் மீன்களை போட்டிபோட்டு வாங்கி சென்றனர். வஞ்சிரம் மீன் கிலோ 900 ரூபாய்க்கும், விளை மீன் 500 ரூபாய்க்கும், பாறை கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனையானது.

Night
Day