தூத்துக்குடி: அம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 14 பெரிய மாட்டு வண்டிகள் மற்றும் 16 சிறிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயம் தொடங்குவதற்காக கொடியை அசைத்ததும் மாடுகள் தங்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. போட்டியை ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கண்டு ரசித்தனர். முன்னதாக பெரிய மாட்டு வண்டி பந்தயம் தொடங்கியபோது, 2 வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுக்குநூறாக உடைந்தது, வண்டியை ஓட்டிய இருவர் காயமடைந்த நிலையில் அவர்களை பொதுமக்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Night
Day