தூத்துக்குடி: காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் குவிந்த பல வண்ண ரோஜாப் பூக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர்ச்சந்தையில் ஒரு ரோஜாப்பூ கட்டு 400 ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது காதலர்கள் ஒருவருக்கொருவர் பூக்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்துவர். இந்த நிலையில் தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஊட்டி, பெங்களூரு மற்றும் மைசூருவில் இருந்து சிவப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக குவிந்துள்ளது. வழக்கமாக 200 ரூபாய்க்கு விற்பனையாகும் ரோஜாப்பூ கட்டு 400 ரூபாய்க்கும், ஒரு ரோஜா பூ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்ததால் பொக்கே தயாரிப்பும் தீவிரமடைந்துள்ளது.

Night
Day