தூத்துக்குடி: கேரளா, குளச்சல் விசைப்படகு மீனவர்களை தடுக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக கடல்பகுதியில் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்குமாறு போராடுவதை கண்டுகொள்ளவில்லை என தூத்துக்குடி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கேரளா மற்றும் கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள், இரவில் தங்கள் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். தங்கு கடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தங்கள் பகுதியில் மீன்பிடித்த கேரளா மற்றும் குளச்சல் பகுதி மீனவர்கள் 86 பேர் மற்றும் 5 விசைப்படகுகளை பிடித்து வந்து காவல்துறையில் ஒப்படைத்ததை சுட்டிக்காட்டிய அவர்கள், மீன்பிடி தடைக்காலத்தில் கேரளா மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். 

Night
Day