தூத்துக்குடி: டாரஸ் லாரி தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலக்கரி லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. தெற்கு திட்டங்குளம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டீசல் டேங்கில் தீப்பற்றி லாரி முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Night
Day