தூத்துக்குடி: தாமிரபரணி நதிக்கரையோர பகுதிகளை சீரமைக்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜர் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். இவர் முக்தி அடைந்த பகுள பஞ்சமியன்று ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 177வது ஆராதனை விழா கடந்த 26ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு, இசை அஞ்சலி செலுத்தி வந்தனர். இதன் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் ஒரே நேரத்தில் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

Night
Day