தூத்துக்குடி: திமுக பேரூராட்சி துணை தலைவி மீது நில ஆக்கிரமிப்பு புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவியான அமிர்தவல்லி நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. முத்துராமன், முருகன், கண்ணன் ஆகிய மூன்று விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் அளித்த புகாரில் அமிர்தவல்லியின் வீடருகே 14 சென்ட் காலி இடம் உள்ளதாகவும், அதை அவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தீர்ப்பு வரும் முன்பே பல்வேறு ஆக்கிரமிப்புகளை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டினர். உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day