தூத்துக்குடி: புன்னகாயல் - பெரியதாழை வரை 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தல் மற்றும் தடைகாலத்தில் மீன்பிடித்தல் ஆகியவற்றை கண்டித்து திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். புன்னக்காயல் முதல் பெரியதாழை வரை 10க்கும் மேற்ட்ட மீனவ கிராமத்தினர், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day