தூத்துக்குடி: மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி துறைமுகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. துறைமுக ஊழியர்கள் போராட்டத்தால் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, துறைமுகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் கப்பல் துறை அமைச்சகம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் போனஸ் ஒப்பந்த பண பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகம் முன்பு மத்திய அரசு மற்றும் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

varient
Night
Day